இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் அமீராக அண்மையில் தெரிவு செய்யப்பட்ட உஸ்தாத் உஸைர் (இஸ்லாஹி) அவர்களை இன்று (23/10/2018) ஜமாஅதுஸ் ஸலாமாவின் தலைமைபீடம் சந்தித்து வாழ்த்துக்களையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொண்டது.
அத்தோடு நாட்டின் பொது விவகாரங்கள், முஸ்லிம் சமூகத்தின் பொதுப் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இச்சந்திப்பில் ஸலாமா சார்பாக அதன் தலைவர் உஸ்தாத் ஆஸாத் அப்துல் முஈத் மற்றும் உதவித் தலைவர்களான Dr. ஸைபுல் இஸ்லாம், சகோதரர் நிஹாஸ் ஆசிரியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.






