கம்பளை நகரில் அமைந்துள்ள மஸார் கல்வி நிலைய திறப்பு விழா நிகழ்வானது 27.04.2018 அன்று மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸலாமாவின் தலைவர் உஸ்தாத் ஆஸாத் அப்துல் முஈத் அவர்கள் கலந்து கொண்டார். சுமார் 30 வருட காலம் வசதி வாய்ப்புகள் இல்லாது பல தியாகங்களுடன் செயற்பட்டு வந்த சகோதர சகோதரிகளுக்கு கிடைத்த ஒரு அருளாக இந்த கட்டிடம் விளங்குகிறது. இந்த இனிய நிகழ்வில் ஸலாமாவின் உயர்மட்ட அங்கத்தவர்கள், நிறுவனங்களின் பிரதிநிதிகள், மற்றும் பிரமுகர்கள் உட்பட இன்னும் பலர் கலந்து சிறப்பித்தனர் .









