“Drug Free Nikagolla” எனும் தொனிப் பொருளில் நிககொல்லவில் நடைபெற இருக்கின்ற நிகழ்ச்சி தொடர்பாக, கடந்த 09-09-2018ம் திகதி நடைபெற்ற ஊர் பள்ளி நிர்வாகிகள் மற்றும் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலில் ஸலாமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத் அவர்கள் கலந்து கொண்டனர்.
அத்துடன் “போதைப் பொருளற்ற தேசம்” எனும் தொனிப் பொருளில் இலங்கையில் பல்வேறு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வரும் OMSED Sri Lanka நிறுவனத்தின் தலைவர் அஷ்ஷெய்க் அஹ்ஸன் ஆரிப் மற்றும் அதன் பிரதித் தலைவர் அஷ்ஷெய்க் A.W.M. பாஸிர் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டு நல்ல பல ஆலோசனைகளை முன்வைத்தனர்.






