ஸலாமா வாராந்த நினைவூட்டல் 12

July 3, 2026
34 Views

மனிதன் தன்னைத் தானே நன்கு அறிவான்.

உன்னைத் தவிர வேறு யாருக்கும் தெரியாத உண்மையான இரகசியம் ஒன்று உண்டு; அது உனக்கும் உன் இறைவனுக்கும் இடையிலான உறவாகும். எனவே மக்களின் புகழ்ச்சியால் ஏமாந்துவிடாதே, அவர்களின் குறை கூறலால் மனம் உடைந்துவிடாதே.

ஏனெனில் உன் உண்மையான மதிப்பு அவர்களின் பார்வையில் இல்லை. மாறாக உன் இதயத்திலும் உனக்கும் அல்லாஹ்வுக்கும் இடையிலான உறவிலும் தான் உள்ளது.

அல்லாஹ்வின் இந்த வார்த்தையை எப்போதும் நினைவில் கொள்:  بَلِ الْإِنسَانُ عَلَىٰ نَفْسِهِ بَصِيرَةٌ

மனிதன் தன்னைப் பற்றி நன்கு அறிந்தவனாக இருக்கிறான்.” (அல்கியாமா: 14)

நீ தனிமையாக உள்ள நிலைமையை மக்கள் முன் தோன்றும் உன் நிலையைக் காட்டிலும் சிறந்ததாக ஆக்கிக் கொள்.

மக்களிடம் நல்லவனாகத் தோன்றுவதை விட அல்லாஹ்விடம் உண்மையுள்ளவனாக இருப்பதில் கவனம் செலுத்து. ஏனெனில் யார் தமது உள்ளத்தைச் சீர்திருத்துகிறாரோ அவரின் வெளிப்படையான நிலையையும் அல்லாஹ் சீராக்குவான்.

மேலும் யார் அல்லாஹ்வுடன் உண்மையாக நடந்து கொள்கிறாரோ அவருக்கு தேவையான அனைத்திற்கும் அல்லாஹ்வே போதுமானவனாக இருப்பான்.

மிகப் பழமையான கல்வி நிறுவனம்
உலகிலேயே உயர் கல்விக்காக நிறுவப்பட்ட மிகப் பழமையான கல்வி நிறுவனம் அல்-கரவிய்யீன் பல்கலைக்கழகம் ஆகும். அதுமட்டுமல்ல உலக வரலாற்றில் ஒரு பெண்ணால் நிறுவப்பட்ட முதல் பல்கலைக்கழகம் என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது.
முஸ்லிம் பெண்மணியான ஃபாத்திமா அல்-பிஹ்ரியா (உம்முல் பனீன்) கி.பி. 859 ஆம் ஆண்டு மொராக்கோவின் ஃபாஸ் நகரில் இந்தப் பல்கலைக்கழகத்தை நிறுவினார். அவரது இம்மகத்தான பணி கல்வி வளர்ச்சியிலும் இஸ்லாமிய நாகரிக வரலாற்றிலும் அழியாத முத்திரையைப் பதித்துள்ளது.
அல்-கரவிய்யீன் பல்கலைக்கழகத்தில் எண்ணற்ற அறிஞர்கள் கல்வி கற்றுள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்:
  • 12ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற தத்துவஞானி இப்னு ருஷ்த்.
  • 10ஆம் நூற்றாண்டின் இரண்டாவது போப் சில்வெஸ்டர். அவர் இந்தப் பல்கலைக்கழகத்தில் கற்ற அரபு எண்களை ஐரோப்பாவிற்கு அறிமுகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
  • 12ஆம் நூற்றாண்டில் யூத சமயச் சட்டம் மற்றும் ஒழுக்க நெறிகள் குறித்த தனது ஆக்கங்களால் புகழ்பெற்ற யூதத் தத்துவஞானி மூசா இப்னு மைமூன் (மைமோனிடீஸ்) அவர்களும் இந்தக் கல்வி நிலையத்துடன் தொடர்புடையவராக இருந்ததாகக் கூறப்படுகிறது.
  • சமூகவியலின் தந்தை என்று போற்றப்படும் இப்னு கல்தூன்.
இவ்வாறு அல்-கரவிய்யீன் பல்கலைக்கழகம் பல நூற்றாண்டுகளாக இஸ்லாமிய உலகிற்கும் உலக நாகரிகத்திற்கும் தலைசிறந்த அறிஞர்களை உருவாக்கிய அறிவியல் மையமாக விளங்கியுள்ளது.
சோதனை முஃமினின் ஈமானை அதிகரிக்கும்
ஒரு முஃமினுக்கு சோதனைகள் எவ்வளவு கடுமையாக வந்தாலும் அவனுடைய அல்லாஹ்வின் மீதான ஈமான் மேலும் வலுப்பெறும். ஏனெனில் ‘பொறுமையுடன் வெற்றி உள்ளது, கஷ்டத்துக்குப் பின்னர் இலகு உள்ளது’ என்ற உண்மையை அவன் உறுதியாக நம்புகிறான்.
ஸதகா
தகாக்கள் அல்லாஹ்வின் அன்பு – திருப்தி, மறுமையில் நிழல், நரக விடுதலை, நோய் நிவாரணம், செல்வத்தில் பரகத் மற்றும் பல நன்மைகளைப் பெற்றுத்தர போதுமானதாகும்.

Leave A Comment