Mercy Lanka நிறுவனத்தினால் அரபு மத்ரஸாக்கள் சிலவற்றை மையப்படுத்தி (ஹிப்லுல் குர்ஆன்) அல் குர்ஆனை மனனம் செய்யும் நிகழ்ச்சித் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு முக்கிய அங்கமாக சுமார் 10 மத்ரஸாக்களை உள்ளடக்கியதாக ஒரு வார பயிற்சி முகாம் கடந்த 8.04.2018 முதல் 14.04.2018 வரை நடைபெற்றது.
இந்த குர்ஆன் பயிற்சி நெறியின் சான்றிதழ் வழங்கும் வைபவம் கடந்த 14-04-2018ம் திகதி நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிதிகளாக ஸலாமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத் அவர்களும், பொருளாளர் Dr. ஸைபுல் இஸ்லாம் அவர்களும் கலந்து கொண்டனர்.